பொம்மை விமானத்தால் இந்தியத் தலைவர்களைக் கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி
டெல்லி:
பொம்மை விமானங்களைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்களைக் கொல்வதற்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவுப்பிரிவினர் பயங்கரச் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
10 முதல் 15 கிலோ எடை வரையிலான வெடிபொருட்கள் இந்த விமானத்தில் நிரப்பப்பட முடியுமாம். வெகுதூரத்தில் இருந்தும் கூட ரிமோட் கண்ட்ரோல் மூலம் இந்த பொம்மை விமானங்களை இயக்கலாமாம்.
300 மீட்டர் சுற்றளவில் உள்ள எந்த இலக்கையும் இந்தப் பொம்மை விமானத்தின் மூலம் தகர்க்க முடியும் என்றும்கூறப்படுகிறது.
இதற்கான சதிகளில் ஜெய்ஷ்-ஏ-முகமது என்ற தீவிரவாத இயக்கம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இவர்களுடைய வயர்லெஸ் செய்திகளை இடைமறித்துக் கேட்டபோதுதான் இந்தப் பயங்கரச் சதித் திட்டம் தெரியவந்துள்ளது.
இது போன்ற தாக்குதல்களைத் தடுப்பதற்காக டெல்லியிலும் காஷ்மீரிலும் தீவிரப் பாதுகாப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன.
லஷ்கர்-ஏ-தொய்பா என்ற தீவிரவாத இயக்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காஷ்மீரில் மேற்கொண்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications