மாஸ்கோவில் வாஜ்பாய்-புடின் நாளை சந்திப்பு
மாஸ்கோ:
பிரதமர் வாஜ்பாய் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் மாஸ்கோ செல்கிறார். அங்கு நாளை ரஷ்ய அதிபர்விளாடிமிர் புடினுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபடுவார்.
புடினுடன் ஆலோசனை நடத்திய பின்னர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் செர்கெய்இவானோவ், ரஷ்ய நாடாளுமன்றமான டுமாவின் தலைவர் ஜென்னடி செலெஸ்னெயேவ் ஆகியோரையும்வாஜ்பாய் சந்தித்துப் பேசுவார்.
புடினும்-வாஜ்பாயும் தீவிரவாதத்துக்கு எதிராக மாஸ்கோ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவார்கள் என்றுதெரிகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் அமரிக்கா நடந்து கொண்டு வருகிறது.இந்தியாவை அமெரிக்கா புறக்கணிப்பதாகக் கருதப்படுகிறது. இந் நிலையில் ரஷ்யாவுடனான நட்புறவை இந்தியாமேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இனி ஆண்டுதோறும் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்திய ராணுவத்துக்கு நவீன ரஷ்ய ஆயுதங்கள் வாங்குவது குறித்தும் புடினுடன் வாஜ்பாய் பேசுவார்.
ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆட்சியில் தலிபான்களுக்கு எந்தப் பங்கும் இருக்கக் கூடாது என இரு நாடுகளும் கூறிவருகின்றன.












Click it and Unblock the Notifications