தமிழக தீவிரவாத அமைப்புடன் கருணாநிதிக்கு தொடர்பா? - பொன்னையன் சந்தேகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ள தமிழக தீவிரவாத அமைப்புக்கும் திமுகதலைவர் கருணாநிதிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுப்பியுள்ளார் அமைச்சர் பொன்னையன்.
அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதாவுக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் அனுப்பியிருப்பதையடுத்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குகெட்டு விட்டது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
அப்படியென்றால் கருணாநிதி இந்த விஷயத்தை நம்புகிறார் என்றுதான் பொருள். இதனால் அவருக்கும் அந்தஅமைப்புக்கும் தொடர்பு இருக்கிறது என்றுதானே பொருள்.
இதிலிருந்து அந்த இ-மெயிலுக்கும் கருணாநிதிக்கும் தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ஒரு முன்னாள் முதல்வர் இப்படிக் கூறியிருப்பதால், அதில் உள்ள உண்மைகளை அரசு கண்டறியும் என்றார்பொன்னையன்.












Click it and Unblock the Notifications