இந்தியாவில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்
டெல்லி:
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் நேற்றிரவு பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தார்.
இந்தியாவுக்கு நவீன ஆயுதங்கள் வழங்க வேண்டும் என ரம்ஸ்பீல்டிடம் பெர்னாண்டஸ் கோரிக்கை விடுத்தார்.இது தொடர்பாக போடப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் எனவும் பெர்னாண்டஸ் கோரினார்.
இந்திய கடற்படைக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. இது குறித்தும், இரு நாட்டுகடற்படைகளும் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவது குறித்தும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக ரம்ஸ்பீல்ட் ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் சென்றார். தஜிகிஸ்தானில் இருந்து விமானம் மூலம்ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர் பாகிஸ்தான் சென்றார். அங்கு அதிபர் பர்வேஸ்முஷாரபுடன் பேச்சு நடத்தினார்.
ரம்ஜான் மாதத்தில் ஆபகானிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்ற முஷாரபின்கோரிக்கையை ரம்ஸ்பீல்ட் நிராகரித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications