மேட்டூர் அருகே வெள்ளைக் காக்கா !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேட்டூர் அருகே வெண் காகத்தின் குஞ்சு ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டு ஏற்காடு வனவியல் பூங்காவில்ஒப்படைக்கப்பட்டது.
மேட்டூர் அருகே உள்ளது புதுச்சாம்பள்ளி. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் வீட்டில் காகம் ஒன்றுகுஞ்சு பொறித்தது. ஆனால் வழக்கமான கருப்பு நிறத்தில் இல்லாமல் அது வெள்ளை நிறத்தில் இருந்தது.
இதனால் ஆச்சரியமடைந்த அந்த விவசாயி மேட்டூர் வனக்காவலருக்குத் தகவல் கொடுத்தார். வனக்காவலர் வந்துபார்த்து விட்டு அதை ஏற்காடு வனவியல் பூங்காவில் ஒப்படைக்குமாறு ஆலோசனை தெரிவித்தார்.
அதன்படி அந்த வெண் காக குஞ்சு ஏற்காடு வன வியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications