திமுக அரசு தான் காரணம்: பன்னீர் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தின் நிதி நிலையை சீர் செய்ய கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கொஞ்சம் கூட அக்கரைகாட்டவில்லை என முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
பன்னீர்செல்வம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,
தமிழக அரசின் கஜானாவை திமுக காலி செய்துவிட்டுப் போய்விட்டது. இதனால் தான பெரும் நிதி நெருக்கடியில்தமிழகம் சிக்கியுள்ளது.
ஆனால், அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. கூட்டுறவுக் கடன்தள்ளுபடி, ரூ. 9 கோடியில் தொகுப்பு வீடுகள் திட்டம், சீரமைக்கப்பட்ட உழவர் சந்தைகள், வீராணம் திட்டம்போன்றவை புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு திமுக அரசு தான் முழுக்க முழுக்கக் காரணம் என்று பன்னீர்செல்வம்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications