போனஸ் கேட்டு தொழிலாளர்கள் போராட்டம்
சென்னை:
தங்களுக்கு கூடுதல் போனஸ் வழங்கக் கோரி சென்னையில் திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சில போக்குவரத்துத்தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை பஸ் டிப்போக்களில் இருந்த இவர்கள் திடீர் போராட்டத்தை ஆரம்பித்தனர்.ஆனால், இப் போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.
பேச்சுவார்த்தை:
இந் நிலையில் போனஸ் குறித்து அரசுக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் தொழிற் சங்கத்தினருக்கும்இடையே பேச்சுவார்த்தை இன்று காலை தொடங்கியது.
சென்னை பல்லவன் இல்லத்தில் நடக்கும் இக் கூட்டத்தில் அரசு சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் நயினார்நாகேந்திரன், அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
தொழிலாளர்கள் சார்பில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு வழங்கியதைவிட 5 சதவீதம் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications