நிதி மோசடிகள்: தமிழகம் முன்னிலை
கோயம்புத்தூர்:
நிதி மோசடிகளில் தமிழகம் தான் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக உள்ளது. அதேநேரத்தில் அதுதொடர்பான வழக்குகளைத் தீர்ப்பதிலும் தமிழகம் தான் முன்னோடியாக விளங்குகிறது.
இதுகுறித்து கோயம்புத்தூரில் நிதி மோசடிப் பிரிவின் ஐ.ஜி. ஷியாம்சுந்தர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் 452 நிதி மோசடி வழக்குகள் நடந்துள்ளன. இந்த மோசடிகளால் 11 லட்சம் பொது மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். மோசடி செய்யப்பட்ட நிதியின் அளவு ரூ.1800 கோடி.
இதுவரை ரூ.290 கோடி பணம் மட்டுமே மோசடி செய்தவர்களிடமிருந்து மீட்கப்பட்டு, உரியவர்களிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்குகளில் இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள ஒரு நிதி நிறுவனம் ரூ. 233 கோடி வரை மோசடி செய்துள்ளது. அதுகுறித்த வழக்கில் விரைவில்குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யயப்படும்.
மேலும் பினாமி பெயரில் நிலங்கள் வாங்குப்படுவதைத் தடுக்க எங்கள் ஆடிட்டர்கள் தீவிர ஆடிட் செய்யஇருக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, நிதி மோசடிகளில் இவ்விஷயத்தில் சென்னை தான் முதலிடம் வகிக்கிறது.அதற்கடுத்த இடங்களை மதுரையும், கோயம்புத்தூரும் வகிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications