நைட்டி அணிந்ததால் மனைவியை தீவைத்துக் கொளுத்திய கணவர்
சென்னை:
மனைவி நைட்டி அணிந்ததால் கோபமுற்ற கணவர் அவரை தீ வைத்துக் கொளுத்தினார். விழுப்புரத்தில் இந்தவிபரீத செயல் நடந்துள்ளது.
விழுப்புரத்தை அடுத்த வழுதரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணிய உடையார். இவரது மகன் முத்து. இவரதுமனைவி சுமித்ரா. இருவருக்கும் திருமணமாகி ஐந்து மாதம்தான் ஆகிறது.
முத்து நாகரீக பழக்க வழக்கங்களை வெறுப்பவராம். பெண்கள் நைட்டி அணிவதை ஆபாசம் என்று கூறுவாராம்.ஆனால் இவரது மனைவி சுமித்ரா இரவில் தூங்கும்போது நைட்டி அணிந்து கொண்டு தூங்குவது வழக்கமாம்.
கணவரின் "நைட்டி வெறுப்பை" பெரிதாக எடுத்துக் கொள்ளாத சுமித்ரா கடந்த 4ம் தேதி இரவில் நைட்டிஅணிந்துள்ளார். அதைப் பார்த்த முத்து கோபமடைந்து மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனார் சுமித்ரா அதைசட்டை செய்யவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த முத்து, சுமித்ரா மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். தீயில் கருகிய சுமித்ராவின்அபயக் குரல் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளோர் அவரை மீட்டு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்கொண்டு சேர்த்தனர்.
முத்து கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications