பெரியகுளம்: கடைக்குள் லாரி புகுந்து ஒருவர் பலி

Subscribe to Oneindia Tamil

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே ரோட்டில் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென்று கடைக்குள் புகுந்ததில் ஒருவர்கொல்லப்பட்டார். மேலும் 2 பேர் படுகாயமடைந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில், நேற்று (திங்கள்கிழமை) ரோட்டில் சென்றுகொண்டிருந்த லாரிதிடீரென்று, ரோட்டோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது.

அப்போது கடைக்குள் இருந்த போத்திராஜ் என்பவர் மீது லாரி ஏறியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஇறந்தார். கடைக்குள் இருந்த மேலும் 2 பேர் படுகாயமடைந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் கடையில் இருந்த ரூ.50,000 மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. இதுகுறித்து போலீசுக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டும், வெகுநேரமாகியும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

இதனால் வெறுப்படைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரியகுளம் சாலையில் நீண்டநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+