கன மழை நீடிப்பு: ஸ்தம்பித்தது தமிழகம்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் பெய்து வரும் கன மழையால் மாநலம் முழுவதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதிலுமே பலத்த மழைபெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் மழை நீரில்மிதக்கின்றன.
சென்னையில் திங்கள்கிழமை காலை முதல் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமைஇரவு முழுவதும் மழை பெய்தவண்ணம் இருந்தது. இதனால் ஏற்கனவே நீரில் மிதந்து வந்த பல பகுதிகள் இன்னும்மோசமடைந்தன.
கொளத்தூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்துகுளங்கள் போலாகி விட்டதால் அப்பகுதிகளில் பிரமாண்ட சைசில் அமைந்த தெர்மகூல் அட்டைகளை படகுகள்போல மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
திருச்சியில் உள்ள இரண்டு பஸ் நிலையப்பகுதிகளும் மழை காரணமாக நீரில் மிதந்தன. பல்வேறு தாழ்வானபகுதிகளும் நீரில் மூழ்கின.












Click it and Unblock the Notifications