இலங்கையில் தேர்தல் கலவரம் - 7 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக நடந்த பல்வேறுவன்முறைச் சம்பவங்களில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு டிசம்பர் 5ல் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் மக்கள் கூட்டணிக் கட்சிக்கும்எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த இரண்டு கட்சிகளைச் சேர்ந்த கூட்டணிக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால் பலஇடங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் வன்முறைகளாக வெடித்துள்ளன.

இதனால் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கின்றனர். இதையடுத்து, இலங்கை காவல்நிலையங்களில் குற்றச்சாட்டுப் பதிவுகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

அரசு செயலகத்தின் கணக்கை வைத்துப் பார்க்கும் போது, ஐக்கிய தேசியக் கட்சியினர் 150 புகார்களையும், மக்கள்கூட்டணிக் கட்சியினர் 110 புகார்களையும் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியினர் 11 புகார்களையும் செய்துள்ளனர்.

அந்த அளவுக்கு தேர்தல் வன்முறைகளும் இலங்கையில் பெருகியிருப்பதையே இந்தப் புகார்கள் கூறுகின்றன.தேர்தல் தொடர்பான இந்த வன்முறைகளில் இதுவரை 7 பேர் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்னும் பல இடங்களில் தேர்தல் வன்முறை வெடிக்கலாம் என்று கருதும் இலங்கை அரசு, நாடு முழுவதும் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் தப்பினார் அமைச்சர்

இந்நிலையில் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சரான மங்கள சமரவீரா மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில், அவர்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மாத்தாரா நகரில் அவர் காரில் சென்று கொண்டிருக்கும்போது, அதன் மீது சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.இச்சம்பவத்தில் சமரவீராவுடன் காரில் இருந்த ஏழு பேருக்கு குண்டுக் காயம் ஏற்பட்டது.

சமரவீரா மட்டும் காயமின்றித் தப்பிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+