ரயிலிலிருந்து எட்டிப் பார்த்தவர் மின் கம்பத்தில் மோதி பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் மின்சார ரயிலில் பயணம் செய்த என்ஜீனியர், மின் கம்பத்தில் அடிபட்டு பலியானார்.
சென்னை புறநகர் பீர்க்கங்கரணையைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் தனியார் நிறுவனமொன்றில் என்ஜீனியராகபணியாற்றி வந்தார்.
புதன்கிழமை காலை மின்சார ரயிலில் அவர் பயணம் செய்தார். திரிசூலம் மற்றும் மீனம்பாக்கம் ரயில்நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, வெளியே தலையை நீட்டிப் பார்த்துள்ளார்.அப்போது மின்சார கம்பம் ஒன்றில் அவர் தலை பட்டு தெறித்தது.
இதில் படுகாயமுற்ற ஈஸ்வரனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர்இறந்தார்.












Click it and Unblock the Notifications