போக்குவரத்துறை ஊழியர் போனஸ்... பேச்சுவார்த்தை இழுபறி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருக்கும், தொழிற்சங்க பிரமுகர்களுக்கும் இடையே போனஸ் குறித்து நேற்று(செவ்வாய்க்கிழமை) நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை இன்று(புதன்கிழமை) தொடர்ந்து நடைபெறும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன்அறிவித்தார்.

தமிழகத்தில் பணிபுரியும் 1 லட்சத்து 15 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 8.33 சதவிகித போனசும்,11.67 சதவிகித கருணைத் தொகையும் சென்ற ஆண்டு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு வழங்கப்படும் போனஸ் தொகை, கருணைத் தொகை குறித்து தமிழக போக்குவரத்துத்துறைஅமைச்சருக்கும், அண்ணா தொழிற் சங்க பேரவை, தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு. ஆகியவற்றின்பிரமுகர்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை புதன்கிழமையும் தொடர்ந்துநடைபெறும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 3 ஆண்டுக்கு ஒரு முறை போடப்படும். 3 ஆண்டுகளுக்குமுன்பு போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.

புதிய ஊதிய ஒப்பந்தத்தை 5 ஆண்டுக்கு ஒரு முறை போடலாம் என்றும். பழைய ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகாலத்திற்கு நீடிக்கலாம் என்றும் போக்குவரத்து நிர்வாகத்தினர் கூறினர். இதை ஏற்க தொழிற் சங்கத்தினர்மறுத்துவிட்டனர்.

புதிய ஊதிய ஒப்பந்தம் போடுவது குறித்து அரசு உட-ன-டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அரசைவலியுறித்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+