திமுக மீது பழிபோடுவதா? - அதிமுகவுக்கு இளங்கோவன் கண்டனம்
சென்னை:
நிதி நெருக்கடிக்கு திமுக மீது குற்றம் சுமத்தி அதிமுக அரசு தப்பிக்க நினைப்பது தவறு என்று தமிழக காங்கிரஸ் கட்சிதலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
கடந்த திமுக அரசு கஜானாவை காலியாக்கிவிட்டு சென்று விட்டதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றுதமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கூறியிருந்தார். இதே கருத்தை தமிழக அமைச்சர் பொன்னையனும்கூறியிருந்தார்.
இந்நிலையில் திமுக அரசின் மீது குற்றம் சுமத்தி அவர்கள் மீது பழி போட்டுவிட்டு அதிமுக தப்பித்துக் கொள்ளமுனைவது தவறானது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். இது குறித்து அவர்சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில்,
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது குறித்து பல விதமானதகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த மிரட்டலை போலீசாரே பரப்பி விட்டதாகவும், கொலை மிரட்டல் பொய்யானது என்றும் கூறப்படுகிறது.உண்மை எதுவாக இருந்தாலும், தீவிரவாதிகளால் அரசியல் தலைவர்களின் உயிருக்கு ஆபத்து வருவதும், கொலைமிரட்டல் வருவதும் கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதாவுக்கு வந்துள்ள கொலை மிரட்டலுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்துள்ளதற்கு இந்த கொலை மிரட்டல் ஓர் எடுத்துக்காட்டு.
தமிழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதற்கு கடந்த திமுக ஆட்சி தான் காரணம் என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வமும், நிதி அமைச்சர் பொன்னையனும் கூறியுள்ளதை ஒப்புக் கொள்ள முடியாது.
திமுக ஆட்சி சரியில்லை என்றுதான் மக்கள் அதிமுகவை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் இவர்கள் கடந்த திமுகஆட்சி மீது குற்றம் சுமத்தி தப்பிக்க நினைப்பது தவறு என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications