களத்தில் குதிக்கும் ஜெர்மன், பிரான்ஸ் படைகள்
வாஷிங்டன்:
ஆப்கானில் தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் போருக்கு, ஜெர்மன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்டநாடுகள் இராணுவ உதவிகள் வழங்க முன்வந்துள்ளன.
இதுகுறித்து ஜெர்மன் அதிபர் ஜெரார்டு ஷ்ரோடர் கூறுகையில், அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக, 3,900ஜெர்மன் வீரர்களை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் நாட்டுப் பாராளுமன்றத்தின் ஒப்புதல்கிடைத்தவுடன், இந்தப் படைகள் ஆப்கானுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார்.
இதுகுறித்து நேற்று வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைச் சந்தித்து விட்டு, பிரான்ஸ் அதிபர் ஜாக்ஸ்சிராக் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே இந்தமப் போருக்காக 2,000 வீரர்களை அனுப்பியுள்ளோம். தற்போதுசிறப்பு அதிரடிப் படைகளையும் அனுப்பத் தயாராக இருக்கிறோம். என்றார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில்,
தற்போது கூட ரஷ்யாப் படைகள் அமெரிக்காவுக்கு உதவிக் கொண்டுதான் இருக்கிறது. நாங்கள் மேலும் சிலதுருப்புக்களை அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாக, அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
அவர்கள் போரில் பாதிக்கப்பட்ட அமெரிக்க வீரர்களைக் காப்பாற்றுவதில் உதவுவார்கள். ஆனால் ஆப்கானுக்குஎதிரான தாக்குதலில் நேரடியாக இறங்கமாட்டார்கள் என்றார் புடின்.












Click it and Unblock the Notifications