தமிழக கோயில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமனம்
காஞ்சிபுரம்:
தமிழகக் கோயில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி கூறினார்.
காஞ்சிபுரத்தில் இன்று (புதன்கிழமை), காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை அமைச்சர் ராமசாமிசந்தித்தார். அப்போது அவருடன் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் எஸ்.எஸ். திருநாவுக்கரசுவும்சென்றிருந்தார்.
அப்போது நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் அமைச்சர் ராமசாமி கூறியதாவது,
திருவண்ணாமலை கோவிலுக்கு கும்பாபிசேகம் நடத்தும் பணிகளைக் கவனிக்க திருப்பணிக்குழு விரைவில்அமைக்கப்படும். மேலும் அந்தக் கோயிலுக்குச் சொந்தமான கட்டிடங்களின் வாடகைப் பணம் இன்னும் ரூ.25கோடி வசூலிக்கப்படாமல் இருக்கிறது. இந்தப் பணம் விரைவில் வசூலிக்கப்படும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தினரால் கட்டப்படும் வீடுகளில், கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்க ஏற்பாடுசெய்யப்படும்.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும், அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.












Click it and Unblock the Notifications