டெங்கு காய்ச்சலுக்கு 16 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருதையடுத்து, 16 குழந்தைகள் இறந்துள்ளன.
கொசுக்கள் மூலம் டெங்குக் காய்ச்சல் குழந்தைகள் மத்தியில் பரவுகிறது. தற்போது சென்னையில் தொடர்ந்து சிலவாரங்களாக கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.
பல குடிசைப் பகுதிகள் தண்ணீரிலேயே பல வாரங்களாக மிதந்து கொண்டுள்ளன. துப்புறவுப் பணியும் நகரில்முறையாக நடக்காததால் நகரில் சுகாதாரமான ஒரு சூழ்நிலை இல்லை.
இதன் காரணமாக கொசு உற்பத்தி பெருகி விட்டது. பகலிலேயே கொசுக்கள் கடிக்கும் நிலையில் சென்னை சிக்கித்தவிக்கிறது. இதனால் கொசுக்களால் பரவும் டெங்குக் காய்ச்சல் சென்னை நகரை பெரும்பாதிப்புக்குள்ளாக்கியிருக்கிறது.
இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களில் 16 குழந்தைகள் சிகிச்சை பலனின்றிஇறந்து விட்டன.












Click it and Unblock the Notifications