தமிழக விடுதலை இயக்கங்களுக்கு விரைவில் தடை
சென்னை:
தமிழர் மீட்புப் படை, தமிழக விடுதலைப் படை ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு விரைவில் மத்திய அரசு தடை விதிக்கும்என்று எதிர்பார்ப்பதாகவும், தமிழகத்தில் இவற்றை தடை விதிக்க வகை செய்யும் உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்றுமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொடா சட்டத்தை தமிழக அரசுஆதரிக்கும். எனவே தமிழர் மீட்புப் படை மற்றும் தமிழக விடுதலைப் படை ஆகிய தமிழ்த் தீவிரவாத அமைப்புகளுக்குவிரைவில் மத்திய அரசு தேசிய அளவிலான தடையை விதிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் இந்த அமைப்புகளுக்கு விரைவில் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இலவச வேட்டி, சேலைவழங்கப்படும். இதற்காக ரூ. 90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 86 லட்சம் பேர் பயன்அடைவார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications