காவல்துறையை நவீனப்படுத்த ரூ.136 கோடியில் திட்டம்
சென்னை:
தமிழக காவல்துறையை நவீனப்படுத்த ரூ.136 கோடியில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் பாதி செலவைமத்திய அரசு ஏற்கும்.
இது தொடர்பாக சென்னையில் தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது.
ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் தமிழகக் காவல்துறையை நவீனப்படுத்த மத்திய அரசிடம்நிதியுதவி கேட்கப்பட்டிருந்தது. அதில் ரூ.200 கோடி செலவில் நவீன ரக ஆயுதங்கள், வாகனங்கள் உள்ளிட்டவசதிகளை ஏற்படுத்த திட்டம் தயார் செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த வேண்டுகோளை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசுக்குஅனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய அரசின் நிதி நிலைமை மற்றும் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின்அளவைக் கருத்தில்கொண்டு, ரூ.200 கோடி நிதியுதவி அளிக்க முடியாது என்று கூறிவிட்டது.
ஆனால், ரூ.136 கோடியில் புதிய திட்டத்தைத் தயார் செய்யுமாறும், அந்தத் தொகையில் பாதியை (ரூ. 68 கோடி)மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும், மீதியை தமிழக அரசுதான் ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசுகூறிவிட்டது.
ஒரு வாரத்திற்குள் இந்தத் திருத்தப்பட்ட திட்டம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு வந்துசேர வேண்டும் என்றும்தெரிவித்திருந்தது.
இதையடுத்து இன்று (வியாழக்கிழமை), தமிழக உள்துறைச் செயலாளர் நரேஸ்குப்தா, தலைமைச் செயலாளர்சங்கர், காவல்துறைத் தலைவர் நெய்ல்வால் ஆகியோர் அடங்கிய உயர் அதிகாரிகள் குழு, ஆலோசனைநடத்தியது.
கூட்டத்தில், ரூ.136 கோடியில் தீட்டப்படும், திட்டத்தில் என்னென்ன வகை, நவீன வசதிகள் இடம்பெற வேண்டும்என்று ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி தமிழகக் காவல்துறைக்கு நவீன ரக ஆயுதங்கள், வாகனங்கள், மற்றும் தொலைதொடர்புக் கருவிகள்உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக டி.ஜி.பி., நெய்ல்வால் கூறினார்.