For Quick Alerts
For Daily Alerts
Just In
அரசு பஸ்களை ஓட்ட முயன்ற அதிமுகவினர்
சென்னை:
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அதிமுகவினரை வைத்து பஸ்களை இயக்க அரசுமுயல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல பஸ் டிப்போக்களில் அதிமுகவினரும் ரெளடிக் கும்பல்களும் நுழைந்து போக்குவரத்துஊழியர்களைத் தாக்கியுள்ளனர். பின்னர் பஸ்களை டிப்போக்களில் இருந்து வெளியே எடுத்து முயன்றுள்ளனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவினரின் இந்தச் செயலுக்கு போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின்தூண்டுதலால் தான் அதிமுகவினர் இந்தச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக திமுக, கம்யூனிஸ்ட் தொழில் சங்கத்தினர்புகார் கூறியுள்ளனர்.
Comments
Story first published: Saturday, November 10, 2001, 5:30 [IST]