ஆட்டோ கட்டணம் "கிடுகிடு" உயர்வு
சென்னை:
போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் கட்டணத்தை பல மடங்குஉயர்த்தி ஆட்டோ டிரைவர்கள் பொது மக்கள் வயிற்றில் அடித்து வருகின்றனர்.
சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு பேருந்துகள் ஓடவில்லை. மற்ற பகுதிகளில்மினிபஸ் இருப்பதால் போக்குவரத்துப் பிரச்சனை ஓரளவு சமாளிக்கப்படுகிறது.
ஆனால், சென்னையில் மினி பஸ்கள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதுவும்தீபாவளி நேரத்தில் பொதுமக்கள் கடைகளுக்குச் செல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி, ஆட்டோக்காரர்கள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.இதைப் போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளிக்குச் செல்லும்குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துப் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் வேன்கள் மூலம் அங்கங்கே சில பகுதிகளில் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications