1000க்கும் மேற்பட்டவர்கள் கைது
சென்னை:
தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை பஸ் ஸ்டிரைக் தொடங்கியவுடன் சென்னை ஆலந்தூர் பஸ் டிப்போவில் நுழைந்த போலீசார்அங்கிருந்த டிரைவர்களிடம் உடனடியாக பஸ்களை இயக்குமாறு கூறினர். ஆனால், அவர்கள் ஓட்ட மறுத்தனர்.
இதையடுத்து டிரைவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 60 டிரைவர்களைபோலீசார் கைது செய்தனர்.
காஞ்சியில் தடியடி:
காஞ்சிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால்அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
20 சதவீத போனஸ் கோரி அரசு டிப்போவின் வெளியே போக்குவரத்து ஊழியர்கள் மறியல் போராட்டம்நடத்தினர். அவர்களை கலைந்து போகுமாறு போலீஸ் கூறியதை அவர்கள் ஏற்கவில்லை.
இதையடுத்து அவர்களை போலீசார் லத்தியால் தாக்கினர். அடித்து விரட்டினர். இதற்க போக்குவரத்து ஊழியர்கள்எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் ரோட்டில் கூடினர். இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தொழிற்சங்கத்தினர்கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications