மகளிர் கிரிக்கெட் அணி: மம்தா தேர்வாவாரா?
பெங்களூர்:
இன்டியா இன்போவின் துணை நிறுவனமான தட்ஸ்கிரிக்கெட் டாட் காம் இணையத்தளத்தைச் சேர்ந்த மம்தா மாபென் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ள இந்தியமகளிர் கிரிக்கெட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.
இந்த 21 பேரிலிருந்து 12 பேர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் போட்டிக்குதேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மம்தாவின் சாதனைகள்:
தென் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியிலும், ரஞ்சி ஜான்சி சாம்பியன்ஷிப்போட்டிகளிலும் மம்தா விளையாடியுள்ளார். பேட்டிங் மற்றும் பெளலிங்கில் மிகச்சிறந்த வீராங்கனை இவர்.
மம்தா கர்நாடக அணி சார்பிலும் விளையாடியிருக்கிறார். இவர் இன்டர்-ஜோனல்சாம்பியன் ஷிப் போட்டியில் தெற்கு பிராந்திய அணியின் கேப்டனாவும் இருந்தார்.
அப்போது அவர் ரயில்வே அணிக்கு எதிராக 54 ரன்கள் எடுத்தார். மத்திய மண்டலஅணிக்கு எதிரான போட்டியில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.வடக்கு மண்டல அணிக்கு எதிரான போட்டியில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்இருந்தார். மேற்கு மண்டல அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகளைகைப்பற்றினார்.
இது போன்ற சாதனைகளால் மம்தா இன்டர் -ஜோனல் மீட் போட்டி தொடரின் சிறந்தவீராங்கனை என்ற விருதை பெற்றார்.
தேர்வாகியுள்ள 21 பேர்:
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ள 21 பேர்(ப்ராபபல்ஸ்) விவரம்:
மிதாளி ராஜ், ரூபாஞ்சலி சாஸ்த்திரி, தீபா குல்கர்னி, நீது டேவிட். ஹேமலதா காலா,சுனிதா சிங், லக்ஷனா பண்டிட், அஞ்சு ஜெயின், அன்ஜுன் சோப்ரா, ஜுலன்கோஸ்வாமி, உஷா, மம்தா மாபென், நூஷினால் காதிர், கருணா ஜெயின், ஸ்வர்ணலட்சுமி, குல்ஷன், ஜெயா ஷர்மா, பிந்தேஸ்வரி, சீமா போவ்மிக், மோனிகா, அர்பிதா.
இதிலிருந்து 12 பேர் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடதேர்ந்தெடுக்கப்படுவார்கள்.