Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் வேலியே பயிரை மேய்கிறது- பா.ஜ.க. குற்றச் சாட்டு

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தமிழகத்தில் வேலியே பயிரை மேய்கிறது, அமைச்சரே கவுன்சிலரைக் கடத்தி சிறை வைக்கிறார் என்று மத்தியவிளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) சேலத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் மேலும்கூறியதாவது,

பாரதிய ஜனதாவின் கொள்கைகளையும், வாஜ்பாய் அவர்களின் தலைமைமையையும் ஏற்பவர் யாராகஇருந்தாலும், தாராளமாக இந்த இயக்கத்தில் சேரலாம். எம்.ஜி.ஆர்.அதிமுக தலைவர் திருநாவுக்கரசு விரைவில்தனது கட்சித் தொண்டர்களுடன், பாரதிய ஜனதாவில் இணையவிருக்கிறார். அதை நாங்கள் முழுமனதுடன்வரவேற்கிறோம்.

இங்கு தேசியம், தெய்வீகம் ஆகிய இரண்டுமே உள்ளது. இதை விரும்புபவர்கள் அனைவரும், இந்த இயக்கத்தில்இணையலாம்.

தமிழகத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்ற கூறப்படுகிறது. தமிழக அரசு இதையே கூறிக்கொண்டிருக்காமல்,இதுகுறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டால் நாங்கள் மகிழ்வோம்.

தமிழகத்தில் திமுக மற்றும் பா.ஜ.க. இடையே சுமூகமான உறவு நீடிக்கிறது.

நாமக்கல்லில் பா.ஜ.க., கவுன்சிலரை கடத்திச் சென்று அமைச்சர் தனபால் வீட்டில் சிறைவைத்துவிட்டனர்.

கலெக்டர், டி.ஐ.ஜி., எஸ்.பி., என அனைத்து உயரதிகாரிகளுக்கம் இது தெரிந்திருந்தும், ஒரு வழக்குக் கூட பதிவுசெய்யப்படவில்லை.

தமிழகத்தில் வேலியே பயிரை மேயும் நிலை நிலவுவதைத் தான் இது காட்டுகிறது.

சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது உடனே முதல்வரும், கவர்னரும் நடவடிக்கை எடுத்து, அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+