போனசைப் பெற்றுக் கொண்ட 20 சதவிகித பஸ் ஊழியர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்த போதிலும், மறு பக்கம்நேற்று (திங்கள்கிழமை) இரவு வரை சுமார் 20 சதவிகித ஊழியர்கள் 8.33 சதவிகித போனசைப் பெற்றுக்கொண்டனர்.
ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தபடி, நேற்று காலை முதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும்,மின் ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கும் பணி ஆரம்பமானது.
போக்குவரத்துக் கழகம் பட்டுவாடா செய்த போனஸ் பணத்தை ஊழியர்கள் வந்து பெற்றுக் கொள்ளஆரம்பித்தனர்.
நேற்று இரவு வரை சுமார் 20 சதவிகித ஊழியர்கள் அரசு அறிவித்திருந்த 8.33 சதவிகித போனஸ் பணத்தைப்பெற்றுக் கொண்டனர்.
எதிர்பார்த்த அளவு ஊழியர்கள் வந்து வாங்கவில்லை என்றாலும், செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து போனஸ்பட்டுவாடா செய்யப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மெய்யப்பன் கூறினார்.












Click it and Unblock the Notifications