பஸ் ஸ்டிரைக்கால் அரசுக்கு இதுவரை ரூ.24 கோடி இழப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக்கால் அரசுக்கு இதுவரை ரூ.24 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகபோக்குவரத்து அமைச்சர் நைனார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஒரு நாள் ஸ்டிரைக்கால் ஏற்படும் நஷ்டம் ரூ.8 கோடி. எனவே முதல் மூன்று நாட்களில் ஏற்பட்டுள்ள நஷ்டம் ரூ.24கோடி ஆகும்.
பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. இனிமேல் முடிவெடுக்க வேண்டியது போக்குவரத்துக் கழகஊழியர்கள்தான் என்றார்.
இதுகுறித்து போராட்டக் குழு அமைப்பாளர் செளந்தரராஜன் தெரிவிக்கையில், இந்த ரூ.24 கோடியுடன், 8.33சதவீத போனசையும் சேர்த்தால் நாங்கள் கோரும் போனஸ் தொகை வந்திருக்கும். இப்படி வீணாக பணம்நஷ்டப்பட்டிருக்காது என்றார்.












Click it and Unblock the Notifications