ரேஷன் கடை ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் 2வது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டனர்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் உணவுப் பொருள் விநியோகிக்கும் பணி தொடர்ந்துபாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 320 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் பணியாற்றும் 3,500 ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரேஷன் கடை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக நெல் கொள்முதல் செய்யும் பணியும்பாதிக்கப்பட்டுள்ளது.
தங்களுடைய கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக ரேஷன் கடைஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications