சிறைகளில் தீபாவளி கொண்டாடும் பஸ் ஊழியர்கள்?
சென்னை:
தமிழகம், ஏன் நாடு முழுவதுமே மக்கள் புத்தாடை அணிந்து தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது,வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மறியல் செய்து கைதாகியிருக்கும் ஆயிரக்கணக்கான போக்குவரத்துக் கழகஊழியர்கள் தீபாவளியன்று சிறைகளில் வாட வேண்டிய பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையிலிருந்து சுமார் 10 ஆயிரம் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கைது செய்யப்பட்டுசிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள சிறைகள் நிரம்பி வழிகின்றன. வழக்கத்தை விட இரண்டு மடங்குக்கும்அதிகமாக சிறைக் கைதிகள் இருப்பதால், இவர்களுக்குச் சாப்பாடு வழங்குவது சிறை அதிகாரிகளுக்குப் பெரும்பாடாக உள்ளது.
தீபாவளியன்று சிறைக் கைதிகளுக்கு பிரியாணி, இனிப்புகள் வழங்குவது சில தன்னார்வத் தொண்டுஅமைப்புகளின் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதிலும் சிக்கல் வந்து விட்டது.
சிறைகளில் கைதிகள் நிரம்பி வழிவதால் அனைவருக்கும் பிரியாணி, இனிப்புகள் கொடுக்க இயலாது என்றுதன்னார்வத் தொண்டு அமைப்புகள் தெரிவித்து விட்டன. எனவே வழக்கமான சாப்பாடுதான் தீபாவளியன்றும்கைதிகளுக்குக் கிடைக்கும் என்று தெரிகிறது.
சிறையில் உள்ள போக்குவரத்துக் கழக ஊழியர்கள் எப்போதுதான் வெளியே வருவார்களோ என்றுஅவர்களுடைய குடும்பத்தினர் சிறைகளின் வாசலில் தவம் கிடக்கின்றனர்.
அவர்களுடைய குடும்பத்தினரும் தற்போது தீபாவளி கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications