கோவில்பட்டி விபத்து: சாவு எண்ணிக்கை 27ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே நேற்று (புதன்கிழமை) நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27ஆகஉயர்ந்துள்ளது.

கோவில்பட்டி அருகே நாகர்கோவிலிலிருந்து மதுரைக்குச் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும்கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலிக்கு பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வேனும் நேருக்கு நேர்மோதின.

இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பஸ் டிரைவர் மற்றும்பயணிகள் உள்பட 25 பேர் படுகாயங்களுடன் கோவில்பட்டி மற்றும் பாளையங்கோட்டை அரசுமருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்குத் தொடர்ந்து தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்தவர், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக,தாற்காலிகமாக நியமிக்கப்பட்ட டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+