மாணவிகள் பஸ் எரிப்பு வழக்கு: 2 முக்கிய அதிமுக குற்றவாளிக்கு ஜாமீன்
சென்னை:
தர்மபுரியில் கோவை விவசாயக் கல்லூரி மாணவிகளின் பேருந்துக்கு தீ வைத்து 3 மாணவிகளை உயிருடன் எரித்தவழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொடைக்காணல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கியதை எதிர்த்து தர்மபுரியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அவர்கள் கோயம்புத்தூர் விவசாயக் கல்லூரியிலிருந்து சுற்றுலா வந்திருந்த மாணவிகள் இருந்தபேருந்துக்கு தீ வைத்தனர். அப்போது பேருந்துக்குள் இருந்த 3 மாணவிகள் தீயில் கருகி பரிதாபமாகஉயிரிழந்தனர். இச்சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பலரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் 29 பேரை சென்னைஉயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் குற்றவியல் நீதிமன்றம் தற்போது மேலும் 2 பேரை விடுதலைசெய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனகராஜ், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுசிறையில் இருந்து வரும் நெடுஞ்செழியன், மாதவன் ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இந்த 2 பேரும் தலா ரூ.10,000 ரொக்கப்பணத்தைக் கோர்ட்டில் கட்ட வேண்டும் என்றும், தினமும் 2 முறைகோர்ட்டுக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications