பஸ் விபத்து: உயிரிழந்த 22 பேரின் அடையாளம் கண்டுபிடிப்பு
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே நேற்று தமிழ்நாடு அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 27 பேர்பலியானார்கள். அவர்களில் 22 பேரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் 20 சதவீத போனஸ் கேட்டுப் போராட்டம் நடத்திவருகிறார்கள். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்கும்நபர்களை வத்ைது அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஒருவர் தமிழ்நாடு அரசுப் பேருந்தை நாகர்கோவிலில் இருந்து மதுரைக்குஓட்டிக்கொண்டு வந்தார். அந்த பஸ் கோவில்பட்டி அருகே உள்ள நாலட்டின் புதூர் அருகே வரும்போது, எதிரே30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துகொண்டிருந்த ஒரு வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேனில் இருந்த 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் இரண்டுபேர் பலத்தகாயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர். இவர்களில் 22 பேர் அடையாளம்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் மாரி, சரவணன், முத்துப் பாண்டி, ராமசாமி, சிவராஜன், சீதாலெட்சுமி, கல்யாணி, சுகந்தா, மீரா ஆகியபெண்கள் கோவில்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் செந்தில்ராஜன், லால்சந்த், மகாராஜன், அந்தோணிமுத்து ஆகியோர் கோவில்பட்டி அருகே உள்ளகிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மற்றவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications