இரவு 10 மணிக்கு மேல் "வெடி போட்ட" 150 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி இரவு 10 மணிக்குமேல் பட்டாசு வெடித்த 150 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று சென்னை மாநகர் போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் கூறினார்.

இதுகுறித்து இன்று (வியாழக்கிழமை) சென்னையில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

தீபாவளியன்று காலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி நேற்று இரவு 10 மணிக்கு மேல் சென்னையில் பட்டாசு வெடித்த150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இதுவரை 1327 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மீட்டருக்கு மேல் அதிக கட்டணம் வசூலித்த 140ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தீபாவளியின் போது நகரில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படத அளவுக்குப் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டது. தீபாவளியும் அமைதியாக கொண்டாடப்பட்டது என்று முத்துக்கருப்பன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+