பஸ் ஸ்டிரைக்: தொழிற் சங்கத்தினருடன் முதல்வர் பேச்சு
சென்னை:
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன்முதல்வர் பன்னீர் செல்வம் வியாழக்கிழமை பேச்சு நடத்தினார்.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஸ்டிரைக் வலுத்து வருவதால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்துதொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் முதல்வர் பன்னீர் செல்வம் வியாழக்கிழமை காலை பேச்சு நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அரசுத் தரப்பில் அமைச்சர்கள்பொன்னையன், நைனார் நாகேந்திரன், தலைமைச் செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பன்னீர் செல்வம் பேசுகையில், பிற்பகலில் போக்குவரத்து அமைச்சர் நைனார்நாகேந்திரன், தொழிற்சங்கப் பிரதிநதிகளுடன் மீண்டும் பேச்சு நடத்துவார்.
அரசின் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதன் காரணமாகவே தொழிலாளர்கள் கேட்ட தொகையைத் தர முடியவில்லை.இப்போதைய நிலையில் 8.33 சதவீதத்திற்கும் மேல் தர இயலாத நிலை உள்ளது. மாநிலம் முழுவதும் 70 சதவீத பேருந்துகள்இயக்கப்படுகின்றன என்றார்.
போக்குவரத்துத்துறை தொழிற்சங்கத்தினருடன் இதுவரை போக்குவரத்து அமைச்சர் நயினார் நாகேந்திரன் மட்டுமே பேச்சு நடத்திவந்தார். இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்துமே தோல்வியைடந்தன.
இப்போது தான் முதன் முதலாக முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாக பேச்சு நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications