கைலி கட்டிக் கொண்டு பஸ் ஓட்டிய தாற்காலிக டிரைவர்
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே விபத்துக்குள்ளான பஸ்சின் தாற்காலிக டிரைவர் கைலி கட்டிக் கொண்டு பஸ் ஓட்டியதாகத்தெரிய வந்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) நிகழ்ந்த இந்த பஸ்-வேன் மோதலில் 27 பேர் உயிரிழந்தனர். போக்குவரத்துக் கழகஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, மாநிலம் முழுவதும் தாற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களைதமிழக அரசு நியமித்திருந்தது.
அவ்வாறு நியமிக்கப்பட்ட ஒரு தாற்காலிக டிரைவரான போஸ் என்பவர்தான் நாகர்கோவிலிலிருந்து மதுரைக்குஇந்தப் பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார்.
அவரிடம் முறையான லைசென்ஸ் இருந்ததா இல்லையா என்பது பற்றித் தகவல் இல்லை. ஆனால் அவர்முறையான சீருடை அணியாமல் கைலி அணிந்து கொண்டு பஸ் ஓட்டியது தெரிந்ததும் மக்கள் பெரிதும்அதிர்ச்சியடைந்தனர்.
தாறுமாறாக போஸ் பஸ்சை ஓட்டியதன் காரணமாகத்தான் வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டு, 27 பேர்பலியாகியுள்ளனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட பல தாற்காலிக டிரைவர்கள் முறையான பயிற்சி இல்லாதவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் சாலைகளில் தாறுமாறாக பஸ்சை ஓட்டுவதால் மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து, தாற்காலிக டிரைவர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், அந்த பஸ்களில் ஏறுவதற்கே மக்கள்அஞ்சுகிறார்கள்.












Click it and Unblock the Notifications