பன்னீர் இன்று டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
டெல்லியில் நடைபெறவுள்ள "பொடா" சட்டம் குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்வியாழக்கிழமை மாலை டெல்லி செல்கிறார்.
"பொடா" சட்டம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் வாஜ்பாய் கலந்து ஆலோசிக்கவுள்ளார். இந்தக் கூட்டம் டெல்லியில்வெள்ளிக்கிழமை நடக்கிறது. இதில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார். இதற்காக வியாழக்கிழமை மாலை அவர்டெல்லி செல்கிறார்.
இந்தக் கருத்தரங்கில் "பொடா" சட்டத்தின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் வாஜ்பாய்விவாதிக்கவுள்ளார்.
2 நாட்களுக்கு பன்னீர் செல்வம் டெல்லியில் இருப்பார். அப்போது பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானிஆகியோரை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வருடன், தலைமைச் செயலாளர் சங்கர் மற்றும் அதிகாரிகளும் டெல்லி செல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications