தலிபான்களின் தோல்வி: இந்தியா பெரும் மகிழ்ச்சி
டெல்லி:
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, நன்மைக்கு கிடைத்த வெற்றியாகும் என இந்தியாகூறியுள்ளது.
மத ஒற்றுமை குறித்து டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரதமர் வாஜ்பாய் கூறுகையில்,
தீமையை நன்மை வென்றுள்ளது. மதத்தின் பெயரால் காஷ்மீரில் தீவிரவாதத்தைத் தூண்டி விட்டு வரும்பாகிஸ்தானுக்கும் அவர்களுடன் சேர்ந்து தீவிரவாதத்தைத் தூணடிய தலிபான்களுக்கும் இது பெரும்தோல்வியாகும்.
மக்கள் ஆதரவைப் பெறுவதற்காகத் தான் தங்கள் தீவிரவாதிகள் தங்கள் செயல்களுக்கு புனிதப் போர் என்றுபெயரிட்டுக் கொள்கிறார்கள். தீவிரவாதிகளுக்கு மதமே கிடையாது. மனித உயிர்களை மதிக்கும்படி தான் எல்லாமதங்களும் சொல்கினறன.
தீபாவளியை ஒட்டி ஆப்கானிஸ்தானிலும் ஒளி பரவியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அங்கு மக்களின்இருண்ட காலம் அகன்று வருகிறது. தலிபான்கள் ஒவ்வொரு நகராக இழந்து வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். முதலில் நமதுவாழ்த்துக்களை அந்த மக்களுக்கு தெரிவிப்போம் என்றார் வாஜ்பாய்.
நிகழ்ச்சியில் தலாய் லாமா உள்பட இந்து, புத்த, ஜெயின், யூத மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications