தமிழக அரசின் நிதி நிலைமைக்கு நிர்வாகத் திறமையின்மையே காரணம்- பிரதமர் தாக்கு
டெல்லி:
சில மாநிலங்களின் நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதற்கு அம் மாநில அரசுகளின் நிர்வாகத்திறமையின்மையே காரணம் என பிரதமர் வாஜ்பாய்குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில் பிரதமரின் இந்தக் குற்றச்சாட்டுமிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்தின் கஜானா சுத்தமாக உள்ளது. மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தரக் கூட பணம் இல்லை. கடந்தமாதம் ரிசர்வ் வங்கியின் உதவியுடன் தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தரப்பட்டது.
இந் நிலையில் தான் தீபாவளி வந்தது. வழக்கம்போல் தீபாவளி அட்வான்சும், தீபாவளி போனசும் கிடைக்கும்எனக் காத்திருந்த அரசு ஊழியர்களின் நினைப்பில் மண் விழுந்தது.
தீபாவளி அட்வான்ஸ் கிடையாது என்று கூறிய தமிழக அரசு போனசையும் மூன்றில் ஒரு பங்காக குறைத்தது.இன்று வரை பல துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் தான் இன்று டெல்லியில் நடந்த மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மாநில அரசுகளின் நிதி நிலைமைகுறித்து பிரதமர் வாஜ்பாய் கவலை தெரிவித்துப் பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் பன்னீர் செல்வமும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்.
வாஜ்பாய் கூறுகையில், மாநில அரசுகள் தங்கள் நிதிநிலைமையை சீர்செய்து கொள்ள சுயமாக முயற்சிகளைமேற்கொள்ள வேண்டும். சில மாநிலங்கள் தங்கள் நிதி நிலைமை குறித்து மத்திய அரசுடன் கலந்துஆலோசிப்பதில்லை.
இந்த மாநிலங்கள் தங்கள் நிதி நிலைமையைச் சீர் செய்ய மத்திய அரசிடம் இருந்து அதிக நிதியைஎதிர்பார்க்கின்றன.
இது அம் மாநிலத்தின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுவதோடு, நாட்டின் ஒட்டுமொத்த நிதி ஆதாரத்தையேபாதிக்கும்.












Click it and Unblock the Notifications