திண்டுக்கல்: மாணவியை கடத்தி கற்பழித்த ஆசிரியர்
திண்டுக்கல்:
மாணவியைக் கடத்தி கற்பழித்த பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
இந்த ஊரின் உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவர் இச் செயலில் ஈடுபட்டார்.
இதே பள்ளியைச் சேர்ந்த மாணவி கழிப்பிடத்துக்குச் சென்றபோது தனது நண்பனுடன் சேர்ந்து அவளைக் கடத்திச்சென்றார்.
நண்பனின் வீட்டுக்குள் வைத்து இருவரும் சேர்ந்து அந்த மாணவியைக் கற்பழித்துள்ளனர். மாணவியின் அலரல்சத்தம் கேட்ட பொதுமக்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
அங்கு இருந்த கோலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள் பின்னர் ஆசிரியரையும் அவரது நண்பரையும்அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவம் அந்த ஊரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆசிரியர் மற்றும் மாணவியின் பெயர் உடனடியாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications