சந்திரிகாவைக் கொல்ல புலிகள் மீண்டும் திட்டம்?
கொழும்பு:
தேர்தல் பிரச்சாரத்தின்போது இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவைக் கொல்ல விடுதலைப் புலிகள் திட்டம்தீட்டியதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது.
நெகோம்போ நகரில் ஒரு வீட்டில் தான் புலிகள் தங்கியிருந்து தாக்குதலை நடத்தினர்.
இந் வீட்டில் ராணுவமும் சி.ஐ.டி போலீசாருடம் சோதனையிட்டபோது, அதிபர் மாளிகையின் அறைகள் குறித்தவரைபடங்கள், அதிபரின் மாநாட்டு அறைக்குச் செல்லும் வழிகள், பாதுகாப்பு வளையம் ஆகியவை குறித்தவிவரங்கள் கிடந்தன.
மனித வெடிகுண்டுகள் அணியும் ஆடைகள், 35 சயனைட் குப்பிகள், துப்பாக்கி, கையெறிகுண்டு, வெடிமருந்துகள், போலியான அடையாள அட்டைகள், செல் போன்கள் ஆகியவையும் கிடந்தன.
கண்டி, அனுராதபுரா ஆகிய இடங்களில் உள்ள அதிபரின் வீட்டு வரைபடங்கள், அனுராதபுராவில் சந்திராகுமாரதுங்கா வழிபாடு நடத்தும் மகா போதி புத்த ஆலயத்தின் வரைபடங்களும் இருந்தன.
இவையெல்லாமே சந்திரிகாவைக் கொல்லும் திட்டத்துடன் தயார் செய்யப்பட்டவை என்று ராணுவம் கருதுகிறது.
ஏற்கனவே சந்திரிகா மீது 1999ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர். அதில்சந்திரிகா காயத்துடன் உயிர் தப்பினார்.












Click it and Unblock the Notifications