த.மா.கா. உடைகிறது: காங்கிரசுக்குத் தாவும் தலைவர்கள்
சென்னை:
சென்னையில் வரும் 19ம் தேதி காங்கிரஸ் கட்சி நடத்தவுள்ள முப்பெரும் விழாவின்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த பல முன்னணி நிர்வாகிகள் காங்கிரஸில் சேரவுள்ளனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அக்கட்சி தள்ளாட்டத்தில் உள்ளது. கட்சித் தலைவராகபொறுப்பேற்றுள்ள கோவிந்தவாசனின் செயல்பாடுகள் கட்சியின் பல முன்னணித் தலைவர்களுக்கு அதிருப்தியைத் தந்துள்ளது.
இதே நிலையில் கட்சி சென்று கொண்டிருந்தால் விரைவிலேயே அது அழிந்து விடும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.
எனவே காங்கிரஸ் கட்சியில் சேர பல தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். முன்னாள் மத்திய பெண் அமைச்சர் ஒருவரின்தலைமையில் இவர்கள் அணி திரண்டுள்ளனர். விரைவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இவர்கள்காங்கிரஸில் சேர முடிவெடுத்துள்ளனர்.
வரும் 19ம் தேதி காங்கிரஸ் கட்சி முப்பெரும் விழாவை நடத்தவுள்ளது. இந்த விழாவின்போது பல த.மா.கா. நிர்வாகிகள்காங்கிரஸில் சேருகின்றனர். கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழ் நாடு காங்கிரஸ் மேற்பார்வையாளருமானரமேஷ் சென்னிதாலா இந்த விழாவுக்குத் தலைமை தாங்குகிறார்.
இந்த விழாவையடுத்து முன்னணித் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் சோனியா முன்னிலையில் சேருகின்றனர். இந்த சேர்க்கைவைபவம் குறித்து காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமாகவிலுள்ள ஒவ்வொருவரும் காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். முதல் கட்டமாக சென்னைமாவட்ட தமாகா நிர்வாகிகள் பலர் காங்கிரஸில் சேருகிறார்கள். விரைவில் தமாகா கலைக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில்இணைந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications