சென்னை மின்சார ரயில்களின் சேவை அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவ மின்சார ரயில்களின் டிரிப்புகள்அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னை நகரில் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக தனியார் பேருந்துகளும், மினி பஸ்களும் இயக்கப்பட்டுவருகின்றன. இவற்றில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அரசு பஸ்கள் சொற்ப அளவில் ஓடினாலும் கூட அவற்றிலும் கூடுதல் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்களின் நலனை முன்னிட்டு சென்னை நகரில் இயக்கப்படும் மின்சார ரயில்களின் டிரிப்புகள்அதிகரிக்கப்பட்டுள்ளன. இது வேலைநிறுத்தம் முடியும் வரை நீடிக்கும் என்று தெவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை கடற்கரை முதல் மயிலாப்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் மாடி ரயிலின் டிரிப்புகள்அதிகக்கப்பட்டுள்ளன. வழக்கமான டிப்களை விட கூடுதலாக 16 முறை இந்த ரயில்கள் இயக்கப்படும். எதிர் முனையிலும்இதேபோல 16 முறை கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும்.

அதே போல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு கூடுதலாக 6 முறை ரயில்கள்இயக்கப்படும். மறு மார்க்கத்தில் கூடுதலாக 4 முறை ரயில்கள் இயக்கப்படும்.

இதேபோல பொன்னேரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களுக்கும் கூடுதலான டிரிப்கள் மின்சார ரயில்கள் இயக்கப்படும்என்று தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+