ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ், பிரான்ஸ் படையினர்

Subscribe to Oneindia Tamil

காபூல்:

தலிபான்களிடமிருந்து நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் கைப்பற்றிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வரும் முயற்சியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஈடுபட்டுள்ளன. தங்கள் தரைப் படைகளைஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளன.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு வடக்கில் உள்ள பாக்ராம் விமானத் தளத்தில் நூற்றுக்கணக்கானஇங்கிலாந்து தரைப் படையினர் விமானம் மூலம் இறங்கியுள்ளனர்.

மனித உரிமை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே அவர்கள் காபூலில் இறங்கியுள்ளதாகக் கூறப்பட்டாலும்,தலிபான்களிடமிருந்து எதிர்ப் படையினரால் கைப்பற்றப்பட்ட காபூல் நகர் முழுவதையும் தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே அவர்கள் இங்கு வந்து இறங்கியுள்ளனர்.

காபூல் நகரம் தவிர வடக்கு ஆப்கானிஸ்தானிலும், இங்கிலாந்து தரைப் படையினர் நூற்றுக்கணக்கில்குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடற்படை கமாண்டோக்கள் ஆவர்.

இப்பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அங்கு சட்டம்-ஒழுங்கை மேற்கொள்ளப் போவதாகஇங்கிலாந்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல் பிரான்சிலிருந்தும் 60 தரைப் படை வீரர்கள் மசார்-ஏ-ஷெரீப் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தாக்குதல் துவங்கியதிலிருந்து இப்போதுதான் முதல் முறையாக பிரான்ஸ் தரைப்படையினர் இங்கு ஊடுருவுகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து ஜெர்மனியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தரைப் படை வீரர்களும் விரைவில்ஆப்கானிஸ்தானுக்கு வரவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+