இ-மெயில் மிரட்டல்: பெங்களூர் சாப்ட்வேர் என்ஜினியர் கைது
பெங்களூர்:
தான் வேலை பார்க்கும் கம்பெனியின் இ-மெயில் சர்வரைச் சிதைத்து விடப் போவதாக இ-மெயில் மூலம் மிரட்டல்விடுத்த ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரை சைபர் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள பீனிக்ஸ் குளோபல் சொலுசன்ஸ் கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்துவருபவர் கே.ஆர். விஜயகுமார். இக்கம்பெனியின் தலைமை அலுவலகம் அமெரிக்காவில் உள்ளது.
இந்தியாவில் உள்ள அலுவலகத்தின் கம்ப்யூட்டர் செயல்பாடுகள் அனைத்தையும் விரைவில் முடக்கப் போவதாகவிஜயகுமார் அடிக்கடி அமெரிக்காவில் உள்ள அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பினார்.
தான் யாரென்று எந்த இ-மெயிலிலும் அவர் தெரிவிக்கவில்லை. மிரட்டல் இ-மெயில்களை மட்டும் தொடர்ந்துஅனுப்பி மிரட்டிக் கொண்டே இருந்தார்.
ஆனால் தலைமை அலுவலகம் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் திடீரென்று அமெரிக்காவில் உள்ளஇக்கம்பெனியின் இ-மெயில் சர்வர் முடங்கிப் போனதும்தான் அவர்களுக்கு உரைத்திருக்கிறது.
இதையடுத்து, பெங்களூரில் உள்ள சைபர் போலீசாரிடம் (சாப்ட்வேர் குற்றங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளபோலீசார்) இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.
போலீசாரும் பீனிக்ஸ் குளோபல் கம்பெனிக்கு வந்த மிரட்டல் இ-மெயில்களை வைத்து, விஜயகுமாரைப் பிடித்துவிட்டனர். பெங்களூரில் உள்ள பல்வேறு இ-மெயில் பிரவுசிங் சென்டர்களிலிருந்துதான் இவர் இந்த இ-மெயில்மிரட்டல்களை விடுத்திருந்ததும் தெரிய வந்தது.
அவற்றில் ஒரு பிரவுசிங் சென்டரைக் கண்டுபிடித்த சைபர் போலீசார், ஓரிரு நாட்களிலேயே விஜயகுமாரையும்பிடித்து விட்டனர்.
கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து கீ-போர்டைத் தட்ட வேண்டிய விஜயகுமாரின் கைகள், தற்போது கம்பிஎண்ணிக் கொண்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications