ஆப்கான் விவகாரத்தில் இந்தியா தலையிடுவது ஏன்?
தொடர்ச்சி...
காத்திருக்கும் மன்னர்:
நார்த்தர்ன் அலையன்ஸ் படையின் அழைப்புக்காகக் காத்திருப்பதாக ஷகீர் ஷாவின் செய்தித் தொடர்பாளர்கூறியுள்ளார். ஆனால், இந்தப் படையின் தலைவர்களான முகம்மத் பகீம், தோஸ்தம், இஸ்மாயில் கான் ஆகியோர்இன்னும் தலிபான்கள் மீதான தாக்குலில் பிஸியாக உள்ளனர். மூவரும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில்முகாமிட்டுள்ளனர்.
விரைவில் இந்த மூவரும் சந்தித்துப் பேசிய பின்னர் ஷகீர் ஷாவுடனான கூட்டத்துக்கு தயாராவார்கள்.
இதில் தோஸ்தமுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்து வருகிறது. நார்த்தர்ன் அலையன்சில் சமீபத்தில் தான் தோஸ்தம்சேர்ந்தார். ஹெராட் நகரை தன்வசம் வைத்துள்ளார். இவருக்கும் நார்த்தர்ன் அலையன்சின் பிற தலைவர்களுக்கும்எப்போதும் ஒத்து வந்ததில்லை.
ஆனால், தலிபான் என்ற பொது எதிரியைத் தாக்க இவர்கள் ஒன்று சேர்ந்தனர்.
இவர்களுக்குள் ஏற்பட்ட பிளவினால் தான் தலிபான் இங்கு ஆட்சியைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பொது எதிரி:
இந்தப் படைக்கு இன்னொரு பொது எதிரி ஒருவர் உண்டு. அவர் பெயர் பாகிஸ்தான்.
இதனால் இந்தப் படையினர் வசம் ஆப்கானிஸ்தான் போய்விடக் கூடாது என்று பாகிஸ்தான் பெரிதும்விரும்பியது. ஆனால், அந்த ஆசையில் மண் அள்ளிப் போட்டுவிட்டு வெற்றிகரமாய் நாட்டை சுற்றுவளைத்துவிட்டது நார்த்தர்ன் அலையன்ஸ்.
இதைத் தான் தீமை தோற்றது... நன்மை வென்றது என்று வர்ணித்துள்ளது இந்தியா.
காபூலில் ரப்பானி:
இந் நிலையில் நார்த்தர்ன் அலையன்ஸ் ஆதரவு பெற்ற ஆப்கானிஸ்தானின் அங்கீகரிக்கப்பட்ட ஜனாதிபதிபுர்ஹானுதீன் இன்று காபூலுக்குள் நுழைந்துவிட்டார். ஷகீர் ஷாவுக்கு வருவதற்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு வரவேண்டாம் என இவரிடம் அமெரிக்கா கூறி வந்தது.
ஆனால், இன்று 15 ராணுவ வாகனங்கள் பாதுகாப்புடன் காபூலில் நுழைந்தார் ரப்பானி.












Click it and Unblock the Notifications