கவர்னர் பதவியே வேண்டாம்: பன்னீர்
டெல்லி:
கவர்னர் பதவியை காலிசெய்ய வேண்டும் அப்படியே கவர்னர் நியமிக்கப்பட்டாலும் மாநில முதல்வரின்ஒப்புதலுடன் தான் நியமிக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெறும் மாநிலக் கவுன்சில் கூட்டத்தில் தமிழகமுதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
கூட்டத்தில் பன்னீர்செல்வம் பேசுகையில்,
பிரிட்டிஷ் ஆட்சியைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட கவர்னர் பதவியால், கடந்த 50 ஆண்டுகளில் எவ்வித பயனும்இல்லை என்பதை அனைவரும் அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளோம். எனவே கவர்னர் பதவியை ரத்து செய்யவேண்டும்.
அப்படியே கவர்னர் பதவி வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினாலும், மாநில அரசுகளின் ஒப்புதல்பெற்றவரையே கவர்னராக நியமிக்க வேண்டும்.
மேலும் ஒரு முறை கவர்னராகப் பணியாற்றியவரை மீண்டும் பதவி நீட்டிப்பு செய்து, கவர்னர் பதவியில் அமர்த்தக்கூடாது என்றார் பன்னீர்செல்வம்.
மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் கவர்னர் பதவி நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை பெரும்பாலான மாநிலமுதல்வர்கள் ஆதரித்தனர்.












Click it and Unblock the Notifications