150 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் காணும் திருவண்ணாமலை கோவில்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கும்பாபிசேஷம் 150 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மார்ச் மாதம்நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர், அண்ணமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் கோயில்மிகப் பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாகும்.
இந்தக் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு முன்பு கும்பிஷேகம் நடந்துள்ளது. தற்போது மீண்டும் கும்பாபிஷேகம்நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.
கோயில் நுழைவு வாயில் அமைத்தல், சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்துதல் மற்றும் துப்புரவுப் பணிகள்ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளைப் பார்வையிட வந்த தமிழக அறநிலையத்துறைஆணையாளர் சீனிவாசன் இன்று (சனிக்கிழமை) திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம்கூறுகையில்,
அருணாச்சலேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 2002ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளது.அதற்கான பணிகள் அனைத்தும் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
150 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications