த.மா.கவை உடைக்கும் காங்கிரஸ்: வாசன் அப்செட்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உடைக்கும் வேலையில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளதால் தமாகாதலைவர் ஜி.கே.வாசன் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
மூப்பனாரால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அவரது மறைவுக்குப் பின் அப்படியேஸ்தம்பித்துப் போய் உள்ளது. கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் யாருக்கும் இந்தக் கட்சியில் நீடிக்க மனமில்லை.
கட்சியைக் கலைத்து விட்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடலாம் என்று பல தலைவர்கள் கூறி வருகின்றனர். சிலதலைவர்கள் மட்டுமே கட்சியை தொடர்ந்து நடத்தலாம் என்று கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை வற்புறுத்திவருகின்றனர்.
இந் நிலையில் முன்னாள் மத்திய பெண் அமைச்சர் ஒருவரது தலைமையில் மிகப் பெரிய கூட்டமே தமாகாவைவிட்டு விலகப் போகின்றன. இதற்கு முன்னோட்டமாக வரும் 19ம் தேதி தமாகாவைச் சேர்ந்த சில முக்கியநிர்வாகிகள் காங்கிரஸில் சேரவுள்ளதாக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். மேலும் விரைவில்தமாகா, காங்கிரஸில் வந்து சேரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தமாகா தலைவர் வாசனை மிகவும் அப்செட் செய்துள்ளதாகத் தெரிகிறது. தங்களது தன்மானத்தைஇளங்கோவன் வம்புக்கு இழுப்பதாக அவர் நினைக்கிறார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசியில் அவர் பேசியிருப்பதாகவும்,அப்போது கட்சியை உடைக்கும் வேலையில் இளங்கோவன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதைத் தடுத்துநிறுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படவே விரும்புகிறோம் என்று வாசன்கூறியதாக தெரிகிறது.
இதற்கு சோனியா தரப்பில் என்ன கூறப்பட்டது என்று தெரியவில்லை.
இதற்கிடையே அடுத்த வாரம் வாசன் டெல்லி செல்லவிருக்கிறார். அப்போது சோனியாவை நேரில் சந்தித்து கட்சிஉடைப்பு விவகாரம் தொடர்பாக பேசுவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications