வீரப்பனின் புகார் நம்பும்படியாக இல்லை: நக்கீரன் கோபால் கூறுகிறார்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் அனுப்பியதாக கூறப்படும் கேசட்டில் நக்கீரன் பத்திரிக்கை குறித்தும், தன்னைக் குறித்தும் வீரப்பன் கூறியுள்ளகுற்றச்சாட்டுக்கள் நம்பும்படியாக இல்லை என்று நக்கீரன் ஆசிரியர் கோபால் கூறியுள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் அனுப்பியதாக ஒரு ஆடியோ கேசட்டை நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மணி சமீபத்தில் வெளியிட்டார்.அந்த கேசட்டில், தான் சரணடைய விரும்புவதாக வீரப்பன் கூறியுள்ளான். மேலும் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் குறித்தும் சிலகருத்துக்களைக் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து நக்கீரன் கோபால் அறிக்கையொன்றில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
முதலில் இது வீரப்பன் அனுப்பிய கேசட்தானா என்பதிலேயே எங்களுக்கு பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், வீரப்பன் விவகாரத்தைமனிதாபிமான நோக்கோடு முதன் முதலாக அணுகியவர்கள் நாங்கள்தான்.
வீரப்பன் எங்களை ஆள்காட்டி என்று கேசட்டில் கூறியுள்ளதாக அறிகிறோம். இந்த வார்த்தை மிகவும் கடுமையான ஒன்று என்பதால் இந்தவிளக்கத்தை அளிக்க வேண்டியதாயிற்று.
தற்போது இந்த கேள்விகளை மக்கள் முன்பும், வீரப்பன் முன்பும் வைக்கிறோம்.
- 1.அதிரடிப்படையினரால் அப்பாவி கிராமத்து மக்கள் சித்திரவதை செய்யப்பட்டது, கற்பழிக்கப்பட்டது, கொலை செய்யப்பட்டது ஆகியவற்றை மனித உரிமை கமிஷனிடம் எடுத்துச் சென்றது நாங்கள். எனவே எங்களைப் பார்த்து வீரப்பன் புகார் கூறியிருப்பதை யாராவது நம்ப முடியுமா?
2.வீரப்பன் குறித்து என்னவெல்லாமோ கருத்து வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில் முதன் முதலில் அவனை நேரில் சந்தித்து, அவனது கருத்துக்களை வெளியிட்டு, பொது மன்னிப்பு மூலம் மட்டுமே வீரப்பனை சாதாரண மனிதனாக்க முடியும் என்று அரசுக்கு விளக்கியதை வீரப்பனால் மறுக்க முடியுமா?
3. நாங்கள் ஒவ்வொரு முறையும் வீரப்பனை சந்திக்க காட்டுக்குள் செல்லும்போது அதிரடிப்படை போலீஸார் எங்களைப் பின் தொடரக்கூடாது என்று கூறியதற்குப் பெயர்தான் ஆள்காட்டி வேலையா?
4. கர்நாடக வனத்துறையினர் கடத்தப்பட்டபோது அவர்களை பத்திரமாக மீட்டு வந்தது நாங்கள்தான். அந்த வனத்துறையினர் கூட நம்பமாட்டார்கள், வீரப்பன் கேசட்டில் கூறியதாக கூறப்படுவதை.
எது எப்படியிருப்பினும், வீரப்பனுக்கு பொது மன்னிப்பு கொடுப்பதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முடியும்என்று கூறியுள்ளார் கோபால்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications