கோவையில் ரூ.1 லட்சம் மதிப்பு பான் மசாலா பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் இன்று (திங்கள்கிழமை) காலை துவங்கிய பான் மசாலா வேட்டையில் இதுவரை ரூ.1லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள பான் மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை ஆகியவற்றை உபயோகிக்க தமிழகத்தில் இன்று முதல் தடைவிதிக்கப்பட்டிருப்பதை அடுத்து, கோயம்புத்தூர் நகர சுகாதாரத் துறை உதவி அதிகாரி ஸ்டான்லி மைக்கேல்தலைமையில் இந்த அதிரடி பறிமுதல் நடத்தப்பட்டது.
கோயம்புத்தூரில் உள்ள நூற்றுக்கும் மேலான கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.
பான் மசாலா பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை நேரடியாகவோ மறைமுகமாகவோவிற்பதற்கு முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.












Click it and Unblock the Notifications